கி.பி 1ஆம் நூற்றாண்டில் பேரரசாக எழுச்சியடைந்த உரோம அரசின் வளர்ச்சிக்கு கீழைத்தேசத்துடனான வர்த்தக உறவு ஒரு முக்கிய காரணமாகும். அந்தவகையில் ஆரம்ப காலங்களில் இலங்கையுடன் உரோம நாடு கொண்ட தொடர்பானது பல்வேறுபட்ட வடிவங்களில் பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது. இதனையே இலங்கையில் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்ட உரோம நாணயங்கள் தெரியப்படுத்துகின்றன. அவ்வகையில் அநுராதபுரம், பொம்பரிப்பு, திருகோணமலை, பொலநறுவை போன்றவற்றிலும் வட இலங்கையில் மாந்தை, கந்தரோடை, யாழ்ப்பானக் கோட்டை, பூநகரியில் மண்ணித்தலை, வெட்டுக்காடு, கௌதாரிமுனை போன்ற இடங்களிலும் இவ் உரோம நாணயங்கள் கிடைத்துள்ளன.
இவை கி.பி 1ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 6ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. www.archaeology.gov.lk/web/index.php?option...id...இலங்கையில் கிடைத்த உரோம நாணயங்களை ஆராய்ந்தவர்களில் ஸ்ரில், கொட்றிங்டன், மக்டொவல் போன்றவர்கள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்கள். கொட்றிங்டன் கி.மு 144-கி.மு 49 வரையான 8 வெள்ளி நாணயங்களை வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். மக்டெவல் என்ற அறிஞர் கி.பி 1ஆம் நூற்றாண்டு- கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையான 14 வெள்ளி நாணயங்களை இலங்கையில் கண்டுபிடித்ததாக கூறுகின்றார். வால்பேக் என்பவர் ரைபீரியல் நாணயத்தைப் பற்றிக் கூறும் பொழுது தென்னிந்தியப் பரப்பில் இருந்து கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றார். இதிலிருந்து அறியப்படுவது உரோமர்கள் நேரடியாகவும் இந்தியாவூடாகவும் இலங்கையுடன் தொடர்பு கொண்டனர் என்பதாகும்.
இந் நாணயங்களின் விளிம்பைச் சுற்றி புள்ளிகள் காணப்படுகின்றன. இவை உரோமர் இலங்கையுடன் கொண்ட முத்து வர்த்தகத்தை குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவ் உரோமக் காசின் அமைப்பைப் பின்பற்றி அதாவது மன்னன் உருவம், பெயர் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. உதாரணமாக பொலநவைக்கால பராக்கிரமபாகு, நிஸங்கமல்லன் ஆகியோரது நாணயங்களைக் குறிப்பிடலாம். உரோமானிய சொலிடுஸ், என்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் கலன்ட என்ற பொற்காசு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
1982, 1983 ஆகிய காலங்களில் கலாசார முக்கோண செயற்றிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீகிரிய அகழ்வாய்வின் போது 1ஆம் கொன்ஸ்ரைனின் மூன்று நாணயங்கள் கிடைதது. அவற்றுள் ஒன்று உரோம நாணய சாலையில் அச்சிடப்பட்டது.
உரோமர் இலங்கையுடன் கொண்ட தொடர்பை இலங்கையில் கிடைத்த உரோம நாணயங்கள் மட்டுமன்றி பிற தொல்லியல் சான்றுகளும் வெளிப்படுத்துகின்றன. இலக்கியம் எனும் போது மகாவம்சத்தில் பாதிகாபயன் கி.மு 22ஆம் ஆண்டு காலப்பகுதியில் உரோமுடன் கொண்ட வர்த்தக உறவு பற்றி மறைமுகமாக கூறுகின்றது. கி.பி 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிப்பிளஸின் நூலில் உரோம வர்த்தகர்கள் இலங்கைப் பொருட்களை தென்னிந்திய துறைமுகத்தில் பெற்றமை பற்றிக் கூறுகின்றது.
இலங்கையுடன் உரோமர் கொண்ட தொடர்பிற்கு மேலும் சான்றாக உரோம மட்பாண்டங்கள் றெளலட்டட் மட்பாண்டங்கள், அரிட்டைட் மட்பாண்டங்கள், ஆம்போராச் சாடிகள் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன. இவை உரோம நாணயங்கள் கிடைக்கப்பெற்ற இடங்களில் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். உரோம வர்த்தகத்தில் மதுபாணம், எண்ணெய் போன்ற திரவப் பொருட்களை பாதுகாக்க ஒருவகை சாடி பயன்படுதப்பட்டுள்ளது. இவை ஆம்போறா சாடிகள் எனப்பட்டன. இத்தகைய தொல்லியல் சின்னங்களும் இலங்கையில்https://www.youtube.com/watch?v=GEFksaqdrjg கண்டுபிடிககப்பட்டதனால் நாணயங்கள் கூறும் கருத்தை நிறுவுகின்றன.
இலங்கையின் அமைவிடம் இங்கு காணப்படும் வளங்கள் என்பவற்றால் கவரப்பட்ட மேலை நாட்டவர்களான உரோம நாட்டவர் இலங்கையுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தன. இதனை வெளிப்படுத்தும் அரிய சான்றாக இலங்கையில் பரவலாகக் கிடைக்கப்பெற்ற உரோம நாணயங்கள் அமைகின்றன.
உசாத்துணைகள்
புஸ்பரட்ணம்.ப, பூநகரி தொல்பொருளாய்வு, 1993, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு, பக் 49-51
கிருஸ்ணராஜா.செ, இலங்கை பண்பாட்டுப் பரிணமத்தின் அடிப்படைகள், AB Creator publishers, பக் 49-51
k.Neelakkannan
No comments:
Post a Comment